பிரசாரத்துக்கு செல்ல தடை? கண்ணீர் விட்டு கதறும் துரைமுருகன்
பிரசாரத்துக்கு செல்ல தடை? கண்ணீர் விட்டு கதறும் துரைமுருகன்
ADDED : மார் 28, 2024 05:34 AM

வேலுார் லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்த், தி.மு.க.,வின் வேட்பாளராக நிற்கிறார். இவரை எதிர்த்து, புதிய நீதிக்கட்சித் தலைவரும் பா.ஜ., கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் களம் காண்கிறார்.
கடந்த முறை, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், ஏ.சி., சண்முகம் தோல்வியுற்றார். இருந்தபோதும், தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.
அதற்காக, கடந்த ஓராண்டாக தொகுதியிலேயே முகாமிட்டு மக்களை சந்தித்தார். இலவச கல்வி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார். மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என உறுதி செய்தபின், களத்துக்கு வந்து விட்டார்.
ஆனால், சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்துக்கு, கட்சிக்குள்ளும் பொதுமக்களிடையிலும் நல்ல பெயர் இல்லை. தி.மு.க., பொதுச் செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு தன் மகனின் செயல்பாடுகளே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.

