sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,

/

ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,

ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,

ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,


ADDED : டிச 12, 2025 10:25 PM

Google News

ADDED : டிச 12, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : புகார் கொடுத்த நபருக்கு சி.எஸ்.ஆர்., பதிவு செய்ததற்காக, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுர் அருகே பன்னிரான்டாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி, 47; விவசாயி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் முத்துராஜா மனைவி முத்துலட்சுமி ஆகியோர் மீது, இடப்பிரச்னை தொடர்பாக, ஆதனக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து இருந்தார்.விசாரித்த ஆதனக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ., சங்கர், இடப்பிரச்னை காரணமாக, சிவில் நீதிமன்றத்தில் நாடி தீர்த்து கொள்ளுமாறு கூறி, எழுத்து மூலமாக இருதரப்பினரும் எழுதி வாங்கி கொண்டு சி.எஸ்.ஆர்., பதிவு செய்து, கொடுத்துள்ளார்.

பின்னர், எஸ்.ஐ., சங்கர், புகார்தாரர் வீரமணியிடம் சி.எஸ்.ஆர். பதிவு செய்து கொடுத்ததற்காக, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், அதிருப்தியடைந்த வீரமணி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார், வீரமணியிடம், எஸ்.ஐ.,சங்கர் பணம் வாங்கிய போது, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us