sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு

/

24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு

24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு

24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு


ADDED : மே 10, 2025 12:47 AM

Google News

ADDED : மே 10, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரம் திறந்திருக்க, அரசு வழங்கிய அனுமதி, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கடந்த 5ம் தேதி, மதுராந்தகத்தில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசும் போது, 'பொதுமக்கள் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு ஜூன், 4ம் தேதி முடிகிறது. எனினும், மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்' என்று, அறிவித்தார்.

அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us