sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இன்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம் சென்னைக்குள் வரவும் தடை

/

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இன்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம் சென்னைக்குள் வரவும் தடை

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இன்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம் சென்னைக்குள் வரவும் தடை

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இன்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம் சென்னைக்குள் வரவும் தடை


ADDED : ஜன 24, 2024 01:26 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தான் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் வர, தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநகர போக்குவரத்து கழக பணிமனையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது முன்வைத்த ஆறு கோரிக்கைகளில், இரண்டு நிறைவேற்றப்பட்டதாக கூறினால், தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து நியமன ஆணை வழங்கப்படுகிறது.

மேலும், ஓட்டுனர்களை தேர்வு செய்ய குறிப்பிட்ட அவகாசம் தேவைப்படும். அதை புரிந்து கொள்ளாமல் குறை மட்டுமே சொல்கின்றனர்.

பிற போக்குவரத்து கழகங்களை விட அதிகமாக, 20 சதவீத தொழிலாளர்கள் எம்.டி.சி.,யில் விடுப்பு எடுக்கின்றனர். எனவே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சேவையாற்ற முன்வர வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 2,213 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

இவ்வாறு பேசினார்.

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கான கட்டுமான பணி ஓரளவுக்கு முடிவடைந்துள்ளது.

அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

அரசு விரைவு பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கி, கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கினால் சமமான போட்டியாக இருக்காது.

அனைத்து போக்குவரத்து கழக பஸ்களையும், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த மாத இறுதிக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களும், கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டது.

கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஆம்னி பஸ்கள் பயணியரை ஏற்றிச் செல்வதை தடுக்க, போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் வர, இன்று முதல் தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது

இதனால், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் மூடப்படும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us