sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு

/

 ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு

 ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு

 ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷனில் 'நாப்கின்' வழங்கப்படாது: தமிழக அரசு


ADDED : டிச 17, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ரேஷன் கடைகளில், 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏழை பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ, 'சானிட்டரி நாப்கின்' வழங்க உத்தரவிட கோரி, தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார் .

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''4,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

''கிராமப்புற பெண் களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வாயிலாகவும், பள்ளி மாணவியருக்கும், பிரசவித்த தாய்மார் களுக்கும் இலவசமாகவும் நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது உள்ளிட்ட விபரங்களை வழங்கும்படி, தமிழக அரசு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us