UPDATED : பிப் 28, 2024 04:40 PM
ADDED : பிப் 27, 2024 11:24 PM

'என் மண்; என் மக்கள்' யாத்திரையில் பேசிய பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல்,எம்.ஜி.ஆர்., - ஜெ.,வை புகழ்ந்து பேசினார்.
தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., வெளியேறியது. ஆனாலும், நேற்று பல்லடத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை விமர்சிக்கவில்லை; மாறாக, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தார். அதே நேரம், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
'அ.தி.மு.க.,வில் பிரிந்துக் கிடக்கும் அணிகளை ஒருங்கிணைக்க, பா.ஜ., தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், பழனிசாமி அணியினர் ஒருங்கிணைய தயாராக இல்லை. எனவே, பழனிசாமி அணியினர் மீது பா.ஜ.,வினர் அதிருப்தியில் உள்ளனர். அதன் எதிரொலி தான், நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சை பார்க்க வேண்டியிருக்கிறது.
'எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான், அ.தி.மு.க.,வை திறம்பட நடத்தினார்கள் என சுட்டிக்காட்டிய மோடி, பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை. பழனிசாமி அணியில் அதிருப்தியில் உள்ளவர்களை, பா.ஜ., பக்கம் இழுக்கும் முயற்சியாக கூட இது, இருக்கலாம்' என்கின்றனர்அரசியல் நோக்கர்கள்.

