ADDED : ஏப் 23, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சேலம் மாவட்டம், மேட்டூரில் மின் வாரியத்திற்கு மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறன் உடைய அலகில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சேலம் மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், மேட்டூர் விரிவாக்க மின் நிலைய அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு, 8:18 மணி முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

