ADDED : அக் 02, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதிய உயர்வு கோரி, 13 ஆண்டுகளாக போராடி வரும் டாக்டர்களின் கோரிக்கையை ஏற்று, துணை முதல்வர் உதயநிதி தீர்வு காண வேண்டும் என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு கோரிக்கை விடுத்து உள்ளது.
சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று முதல் 9ம் தேதி வரை, பல மொழி இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடக்க உள்ளது. பல்வேறு மொழி இலக்கியங்களில் திருக்குறளின் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறித்தும், பல்வேறு மொழியினர் பார்வையில் திருக்குறளின் கருத்துகள் குறித்தும் ஆய்வு மாணவர்களுக்கு விளக்கப்பட உள்ளது.

