ADDED : அக் 02, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 116 பேர் சார் பதிவாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார். ஈரோடு, கிருஷ்ணகிரி, துாத்துக்குடி, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணை தேர்வை, ஜூலை 24ல் எழுதிய தனித்தேர்வர்கள், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழையும், மதிப்பெண் பட்டியலையும், தேர்வு எழுதிய மையங்களிலேயே, வரும் 4ம் தேதி பெறலாம் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

