sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு

/

 நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு

 நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு

 நாளை வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 26, 2025 02:09 AM

Google News

ADDED : டிச 26, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திருவண்ணாமலையில் நாளை துவங்கும், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்க வேண்டும்' என, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலுார் சாலையில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, 'வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2025' விழா நாளை துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

மேலும், 80,571 விவசாயிகளுக்கு, 669 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

கண்காட்சியில், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகள், தங்களின் திட்டங்களை காட்சிப்படுத்துகின்றன.

கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், விவசாயிகள், மாணவர்கள், பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us