sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

/

மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

59


UPDATED : செப் 23, 2025 01:32 PM

ADDED : செப் 23, 2025 12:43 PM

Google News

59

UPDATED : செப் 23, 2025 01:32 PM ADDED : செப் 23, 2025 12:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கலாம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஜிஎஸ்டி வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், மத்திய பாஜ அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது.

ஹிந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது.

கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஆலோசனை


சென்னை அண்ணா அறிவாலயத்தில் லோக்சபா, ராஜ்ய சபா திமுக எம்பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை திமுக தீவிரப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு திமுக எம்பிக்கும் 3 முதல் 4 தொகுதிகள் வரை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருந்து பணி செய்ய வேண்டும். தங்கள் தொகுதிக்கு உட்பட இடத்தில் நடக்கும அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர்களுடன் எம்எல்ஏக்கள் இணைந்து பணி செய்ய வேண்டும். விடுப்பட்ட வாக்காளர்களை கண்டறிய வேண்டும்.
தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து எம்எல்ஏக்கள் ஆய்வு செய்ய வேண்டும். எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.








      Dinamalar
      Follow us