sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ.,க்கு நீதிபதி கண்டனம்

/

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ.,க்கு நீதிபதி கண்டனம்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ.,க்கு நீதிபதி கண்டனம்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ.,க்கு நீதிபதி கண்டனம்

2


ADDED : ஏப் 15, 2024 04:44 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:44 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி 3 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக சிபிஐ.,க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று (ஏப்.,15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே கூறுவதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மே 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us