sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் தைரியம் இருந்தால் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை சவால்

/

முதல்வர் தைரியம் இருந்தால் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை சவால்

முதல்வர் தைரியம் இருந்தால் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை சவால்

முதல்வர் தைரியம் இருந்தால் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை சவால்


ADDED : ஏப் 17, 2025 06:49 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், தமிழக அரசு துறைகளில், 39,000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது எனக் கூறிய, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சரான, அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., 1998 ம் ஆண்டு, தி.மு.க.,வை வீழ்த்த, பா.ஜ., உடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றோம். அதன்பின் காவிரி பிரச்னைக்காக, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதுடன், கூட்டணியை முறித்துக் கொண்டோம். பா.ஜ., உடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. ஐந்து ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தனர். அது பொருந்தும் கூட்டணியா, பொருந்தாத கூட்டணியா என, முதல்வர் கூற வேண்டும்.

சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது, தி.மு.க.,வின் கொள்கை. ஆனால், அ.தி.மு.க., தமிழக நலனுக்காக, கூட்டணி அமைக்கும். தற்போது பழனிசாமி சரியான முடிவு எடுத்துள்ளார். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி நடக்கிறது. அமித்ஷா 30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழல் குறித்து அமித்ஷா கூறியதற்கு, தி.மு.க., இதுவரை வாய் திறக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் தைரியம் இருந்தால், 39,000 கோடி ரூபாய் ஊழல் எனக் கூறிய அமித்ஷா மீது, வழக்கு தொடரட்டும். பழனிசாமி சரியான கூட்டணி அமைத்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு இடையூறு வந்தால், அ.தி.மு.க., அவர்கள் பக்கம் இருக்கும். வக்ப் சட்ட மசோதாவை எதிர்த்து, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளோம்.

முஸ்லிம் மக்களுடன் சுமுகமான உறவு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிதான் முஸ்லிம் மக்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கியது. பழனிசாமிக்கு நாட்டு மக்களின் உணர்வு தெரியும். அதன் அடிப்படையில், கூட்டணி அமைத்துள்ளார். கடந்த செயற்குழு, பொதுக்குழுவில், அவருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அடிப்படையில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. இனியும் கூட்டணி ஆட்சி வராது. வரும் 2026 தேர்தலில் பழனிசாமி வென்று, தனியாக ஆட்சி அமைப்பார்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us