sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்': 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

/

போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்': 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்': 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்': 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

14


UPDATED : மே 25, 2024 03:55 PM

ADDED : மே 25, 2024 11:52 AM

Google News

UPDATED : மே 25, 2024 03:55 PM ADDED : மே 25, 2024 11:52 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போக்குவரத்து துறை - போலீஸ் துறை இடையே கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் தமிழக உள்துறை செயலாளர் அமுதா - போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டி இடையே நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

திருநெல்வேலி - துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும்' என அறிவுறுத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தது.

இதனால் கடுப்பான போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், 'அரசு பஸ்களை தவறான முறையில் இயக்கினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்' என வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதி மீறிய அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும், டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த 3 நாட்களாக பிரச்னை நீடித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தது. இது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசுத்துறைகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் எங்கு போய் முடியுமோ என கவலை தெரிவித்த அவர்கள் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியதுடன்? உடனடியாக இதில் தலையிட்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவுரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டனம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீஸ் துறை. போக்குவரத்து துறைக்கு இடையே நடக்கும் பனிப்போரைத் தமிழக அரசு தடுக்க தவறியது. பொது மக்களுடன் நேரடியாக தொடர்புடைய இரு துறைகளில் நடக்கும் பனிப்போரை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனை சரி செய்ய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். இரு துறை இடையே மோதல் போக்கு நிலவுவதாக வரும் செய்திகள் கவலை தருகிறது. ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us