sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்

/

தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 29, 2025 03:50 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 03:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தை மீட்பதற்கான முதற்படி, திமுக ஆட்சியை அகற்றுவதுதான் என்று அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும்,சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால் , சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு,

குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது.

சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழத்தை மீட்பதற்கான முதற்படி.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us