sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அப்பாவுவே காரணம்

/

அப்பாவுவே காரணம்

அப்பாவுவே காரணம்

அப்பாவுவே காரணம்


ADDED : பிப் 13, 2024 04:27 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவர்னர் உரைய வாசித்த சபாநாயகர் அப்பாவு இறுதியாக பேசும் போது, 'எங்களுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்' என்று கூறிவிட்டு, சாவர்க்கர், கோட்சே போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.

சபையில் இல்லாத மரபை, சபாநாயகர் அறிமுகப்படுத்தி உள்ளார். சபாநாயகர் மரபுப்படி நடக்கவில்லை; கவர்னர் ரவி மரபுப்படி நடந்து கொண்டார். சபாநாயகர் பேச ஆரம்பித்து, மரபை மீறினார். எனவே, கவர்னர் சபையிலிருந்து வெளியேறினார். கவர்னர் பேசியது சபை குறிப்பில் இருக்க வேண்டும்.

அரசு எழுதிக் கொடுப்பதை, கவர்னர் வாசிப்பது மரபு. அதில் கவர்னர் திருத்தம் செய்யக் கூறியதை செய்யாததாலும், சபை மரபை மீறி சபாநாயகர் பேசியதாலும், கவர்னர் வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த பின், தேசிய கீதம் இசைப்பதில் தவறில்லை. சபாநாயகர் பேசாமல் இருந்திருந்தால், கவர்னர் முழுமையாக இருந்திருப்பார்.

- நயினார் நாகேந்திரன்,

சட்டசபை பா.ஜ., தலைவர்








      Dinamalar
      Follow us