sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹெல்மெட் இன்றி பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி

/

ஹெல்மெட் இன்றி பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி

ஹெல்மெட் இன்றி பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி

ஹெல்மெட் இன்றி பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி


ADDED : மார் 12, 2024 02:21 AM

Google News

ADDED : மார் 12, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 28. தேவக்கோட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர். புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசித்தார். இவரது மனைவி சுஷ்மிதா, 26. இவர்களது மகள் ஹரிணி, 3. நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் குடும்பத்துடன் பைக்கில், ஹெல்மெட் அணியாமல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிய போது, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே எதிரே, புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், இவர்கள் பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன், ஹரிணி சம்பவ இடத்திலேயே இறந்தனர்; சுஷ்மிதா படுகாயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ்சை அடித்து நொறுக்கினர். திருகோகர்ணம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன், 34, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us