sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்

/

கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்

கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்

கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்


ADDED : ஜூலை 22, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'கல்லுாரி வாயிலில் நின்று, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, அதிகார துஷ்பிரயோகம்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க.,வினர், உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில், வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா, இலவச பஸ்சில் தானே பயணம் செய்கிறீர்கள் என மிரட்டி, ஆதார், தொலைபேசி எண்களை பெற்றனர்.

தற்போது கல்லுாரிகளில், 'ஓரணியில் தமிழகம்' என, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை வினியோகிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

உதவிப் பேராசிரியர்கள் துவங்கி, முதல்வர் வரை, கல்லுாரிகளில் காலியாக இருக்கும், பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கட்சிக் கொடியுடன், கல்லுாரி வாயில்களை மறித்து, கும்பலாக நிற்கும் தி.மு.க.,வினரை கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ - மாணவியர் தெரிவித்துள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம்.

தி.மு.க.,வினரின் இத்தகைய செயல், கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் என, முதல்வருக்கு தெரியவில்லையா? வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லுாரி வாயிலில் நின்று கூவினாலும், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us