sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல்: வானிலை மையம் அறிவிப்பு

/

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல்: வானிலை மையம் அறிவிப்பு

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல்: வானிலை மையம் அறிவிப்பு

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல்: வானிலை மையம் அறிவிப்பு


UPDATED : நவ 29, 2025 09:36 PM

ADDED : நவ 29, 2025 05:00 PM

Google News

UPDATED : நவ 29, 2025 09:36 PM ADDED : நவ 29, 2025 05:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:

சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு அருகே 350 கி.மீ துாரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு வட தமிழகத்தை நெருங்கும். நாகை மாவட்டத்தில் மிக மிக அதிக மழை பெய்துள்ளது. கோடியக்கரையில் 25. செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலான கடந்த 7 மணி நேரத்தில் நாகையில் 11 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. காரைக்காலில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

காற்றின் வேகம்

புயல் தாக்கம் காரணமாக, வட தமிழகத்தில் இன்று தரைக்காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களில் 80 கி.மீ வேகத்திலும், சென்னையில் 75 கி.மீ வேகத்திலும் தரைக்காற்று வீசலாம்.

நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ வரை டிட்வா புயல் நெருங்கி வரும். செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம்,கடலுார் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையில் நாளை 60 கி.மீ. முதல் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

டிசம்பர் 1 முதல் மழை படிப்படியாக குறையக்கூடும்.

இவ்வாறு அமுதா கூறினார்.

விலகியது:

புயல் தற்போது இலங்கையை விட்டு முழுவதும் விலகியுள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி யாழ்ப்பாணத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

டிட்வா” புயல் நிலவரம்:

29-11-2025 - தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயலானது, வடதிசையில் நகர்ந்து, இன்று மாலை 05:30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.

அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) மாலை 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.






      Dinamalar
      Follow us