ADDED : ஜன 02, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கல்லாலங்குப்பத்தை சேர்ந்தவர் ராமஜெயம், 45. இவரது மனைவி குமுதவள்ளி, 40, வீட்டிலேயே டெய்லரிங் தொழில் செய்கிறார். இவர்களுக்கு, இரு மகன்கள், மகள் இருந்தனர். மூத்த மகன் சுனில், 19, தனியார் கல்லுாரியில் பி.இ., படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை சுனில், வீட்டில் கட்டிலில் அமர்ந்து தம்பி, தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தவறி கீழே விழுந்தவரின் மார்பில், தரையிலிருந்த கத்திரிக்கோல் குத்தியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த வினோத மரணத்தை, கொண்டபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

