sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்

/

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்


ADDED : மார் 09, 2024 02:31 AM

Google News

ADDED : மார் 09, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில், 'எச்.பி.வி.,' தடுப்பூசி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.

கருப்பை வாய் புற்றுநோய்க்கு, மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும், 'எச்.பி.வி.,' வைரஸ் முக்கிய காரணமாகும். எச்.பி.வி., தடுப்பூசி திட்டம், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில், 9 - - 14 வயது வரையிலான, பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில், எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி, ஒன்பது முதல் 14 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும், இரண்டு டோஸ் வழங்கப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து, 180வது நாளில் அடுத்த தடுப்பூசி போட வேண்டும். முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, புற்றுநோய் நிறுவன பரிசோதனை மையத்தில், தகுதியான 2,000 சிறுமிகளுக்கு, முதல் டோஸ் எச்.பி.வி., தடுப்பூசி போடப்படும்.

அதன்பின், மாநில சுகாதாரத்துறை, தேசிய சுகாதாரப் பணி, ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், விழுப்புரம் நகரில் உள்ள, ஒவ்வொரு பள்ளிகளிலும் சாத்தியமான வகையில், படிப்படியாக தடுப்பூசி போடப்படும். இதையடுத்து, மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.

துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவர் சேஷசாயி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us