sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

/

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

6


ADDED : டிச 25, 2025 01:46 PM

Google News

ADDED : டிச 25, 2025 01:46 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கஞ்சா வாசனை வருவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் ஆய்வு செய்த போது 3 அடி உயரத்திற்கு கஞ்சா வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கஞ்சா செடியை வேரோடு பிடிங்கி சென்றனர்.

இது குறித்து டாக்டர்கள், நோயாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரும் வளர்த்தார்களா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us