sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

/

ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

5


UPDATED : ஏப் 15, 2024 07:07 PM

ADDED : ஏப் 15, 2024 12:59 PM

Google News

UPDATED : ஏப் 15, 2024 07:07 PM ADDED : ஏப் 15, 2024 12:59 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஏப்.,17 மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரத்தை நீட்டிப்பு செய்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழகத்தல் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாள் (ஏப்.,17) உடன் முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை மறுநாள் (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டளிக்கலாம். விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.






      Dinamalar
      Follow us