sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு

/

 மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு

 மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு

 மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு


ADDED : டிச 25, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 25, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகரின் 61, உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன.

ராமநாதபுரம் கழுகூரணியைச் சேர்ந்த சேகர், டிச.,20 ல் டூவீலரில் சென்ற போது கீழே விழுந்ததில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் டிச.,21 ல் அனுமதிக்கப்பட்டு டிச.,23 இரவு மூளைச்சாவு நிலையை அடைந்தார். உடல் உறுப்புகளை தானமாக தர மனைவி கஸ்துாரி முன்வந்தார்.

கல்லீரல் அகற்றப்பட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், எலும்பு, தோல் ஆகியவை மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்காக தானமாக பெறப்பட்டன. சொந்த ஊரில் சேகரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் இந்தாண்டில் 3 பெண்கள், 18 வயதுக்குட்பட்டோர் என பல்வேறு விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. 2 பேரிடம் இருந்து இதயம், 2 பேரிடம் இருந்து நுரையீரல் பெறப்பட்டன. அனைவரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கருவிழிகள் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us