sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமரன் திரையிட்ட தியேட்டரில் குண்டு வீச்சு: இருவர் சிக்கினர்

/

அமரன் திரையிட்ட தியேட்டரில் குண்டு வீச்சு: இருவர் சிக்கினர்

அமரன் திரையிட்ட தியேட்டரில் குண்டு வீச்சு: இருவர் சிக்கினர்

அமரன் திரையிட்ட தியேட்டரில் குண்டு வீச்சு: இருவர் சிக்கினர்

1


ADDED : நவ 20, 2024 12:18 PM

Google News

ADDED : நவ 20, 2024 12:18 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டுள்ளது. நவ., 16ம் தேதி அதிகாலையில் இரண்டு பேர் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. கட்டடம் சேதம் இல்லை. இருப்பினும் குண்டு வீச்சு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் குண்டு வீசிய இருவர் சிக்கினர். மது அருந்திவிட்டு தியேட்டருக்குள் சென்றபோது, கண்டித்து வெளியே அனுப்பப்பட்டதால் குண்டு வீசினார்களா அல்லது அமரன் படம் குறித்த எதிர்ப்பால் இதில் ஈடுபட்டார்களா, பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடக்கிறது. அவர்கள் கைது செய்தபின் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us