ADDED : டிச 26, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் இணைவரா என கேட்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள் எதுவும் நடக்கலாம்; 24 மணி நேரத்தில் கூட, கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன.
த.வெ.க.,வுக்கு கட்டமைப்பு உள்ளதா? பூத் கமிட்டி முழுமையாக உள்ளதா? அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என அவர்களால் இப்போது சொல்ல முடியுமா?
இவ்வாறு கூறினார்.

