sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

/

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

21


ADDED : பிப் 04, 2025 06:57 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:57 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பக்தர்கள் மீது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது,'' என, மதுரையில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் எதைச் செய்தாலும் அதை தடுப்பது என தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் செய்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பிப்.,4 ஹிந்துமுன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., என பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதற்கு வழக்கம்போல போலீஸ் அனுமதி மறுப்பு, கெடுபிடி உள்ளது. ஆர்ப்பாட்டம் குறித்து பல மாவட்டங்களிலும் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்கின்றனர். இதனால் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை முருக பக்தர்கள் மீது தொடுத்துள்ளதாக கருதுகிறோம்.

ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம். அதே போல அரசு, கலெக்டர், எஸ்.பி.,யும் கட்டுப்பட வேண்டும். இங்கு போராட்டத்திற்குத்தான் தடை விதித்துள்ளனர். தைப்பூச நேரத்தில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கெடுபிடி காட்டுவது சரியா.

பா.ஜ., எதிர்க்கட்சியாக உள்ள கேரளா, மேற்கு வங்கத்தில்கூட அனுமதிக்கின்றனர். இங்கு எந்த ஜனநாயக வழிமுறையையும் அனுமதிப்பதில்லை. தி.மு.க.,வுக்கு ஒரு நீதி. மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றார்.

என்.ஐ.ஏ., விசாரிக்க கோரிக்கை

மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் பா.ஜ., வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த மனு: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதுாக்கி உள்ளது. என்.ஐ.ஏ., சோதனை, வழக்குகள் பதிவு மூலம் தெரிகிறது. திருப்பரங்குன்றம் மலைமீது 2012ல் வெடிகுண்டு, பேட்டரிகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி தொல்லியல் துறை, மற்றொரு பகுதி ஹிந்து அறநிலையத் துறையால் கண்காணிக்கப்படுகிறது. போலீசாரும் பாதுகாப்பில் உள்ளனர்.இவற்றையும் மீறி சிலர் மலையில் திட்டமிட்டு பச்சை வண்ணத்தை வரைந்துள்ளனர். ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவை உண்டனர். காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடப் போவதாகவும், மலையை சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிட்டு, வேண்டுமென்றே கலவரத்தை துாண்டும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.இவ்வாறு செயல்படுவோரை கண்டறியவும், இதற்கு மூளையாக செயல்படும் தேச விரோத சக்திகளை சுதந்திரமாக விசாரிக்கவும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் என்.ஐ.ஏ., அமைப்புக்கு மாற்ற வேண்டும். தொடர்ந்து அசம்பாவிதம் நடப்பதை தடுக்க துணை ராணுவப் படையையும் நியமிப்பதுடன், மலைமேல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us