sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு

/

130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு

130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு

130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு


ADDED : ஆக 30, 2025 06:20 AM

Google News

ADDED : ஆக 30, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; தாராபுரத்தில், 130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுதும் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களுக்கு, 70 சதவீதத்துக்கும் மேல் நெல் விதைகள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உற்பத்தியாகின்றன. இங்கு, 40க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிறுவனங்களும், 130க்கும் மேற்பட்ட விதை நெல் விற்பனை மையங்களும் உள்ளன.

ஆண்டுதோறும், 75,000 டன்னுக்கும் மேற்பட்ட விதை நெல் கையாளப்படுகிறது. உரிய ஆய்வுக்கு பின் சான்றிதழ் வழங்கப்பட்டு, விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

இங்குள்ள விதை நெல் விற்பனை மையங்களில், ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில், முளைப்புத்திறன், புறத்துாய்மை, இனத்துாய்மை, விதை நலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில், 130 டன் எடையில், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதை நெல், தரமாக இல்லை என, தெரிய வந்தது. இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us