sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது

/

ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது

ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது

ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது


ADDED : டிச 17, 2025 02:43 PM

Google News

ADDED : டிச 17, 2025 02:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சதிகாரன் கோமாவில் இருந்து மீண்டதும், கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே, சுற்றுலா தளமான பாண்டை கடற்கரையில், யூத சமூகத்தினரின் ஹனுக்கா பண்டிகையில், கூடியிருந்த மக்கள் மீது பயங்கரவாதிகள் இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இது தவிர, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை பயங்கரவாத தாக்குதல் என்று ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை பொதுமக்களே தாக்கி மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள், சாஜித் அக்ரம், 50, மற்றும் அவனது மகன் நவீத் அக்ரம், 25, என அடையாளம் காணப்பட்டனர். இதில் பிடிபட்ட நவீத் அக்ரம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

சாஜித் அக்​ரம் ஹைத​ராபாத்​தின் டோலிசவ்கி நகரத்தை பூர்​வீக​மாக கொண்​ட​வன். கடந்த 1998ம் ஆண்டு மாணவர் விசா​வில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​விட்​டாரன் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவன் தாக்குதல் நடத்திய பிறகு சுட்டுக்கொல்லப் பட்டதால் உறுதிசெய்ய முடியவில்லை.

இந்த சூழலில், தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி நவீத் அக்ரம் கோமாவில் இருந்து மீண்டதும், மருத்துவமனையில் படுக்கையில் கைது செய்யப்பட்டான். அவன் மீது ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு மற்றும் 15 கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடூரனிடம் விசாரணை நடக்கிறது. பின்னர் தான் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழு விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us