sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜன.,24ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜன 10, 2024 12:09 PM

Google News

ADDED : ஜன 10, 2024 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஜன 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

2006ம் ஆண்டு திமுக ஆட்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று(ஜன.,10) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும் ஜன 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us