sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு

/

புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு

புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு

புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு


ADDED : பிப் 03, 2024 01:22 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் லலித்குமார் என்பவர், தடை செய்யப்பட்ட, 495 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக, கும்பகோணம் மேற்கு போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

கைதான லலித்குமார், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அரசு தரப்பில், 'மனுதாரருக்கு எதிராக இதுபோன்ற இரு வழக்குகள் உள்ளன; ஜாமின் வழங்கக் கூடாது' என வாதிடப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை போலீசில் ஆஜராக வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டம், சீரமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை அமைப்பதற்காக, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

அதற்கான ஆதாரம், ஆவணங்களை பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us