sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி... ரூ.522.34 கோடி :புதுச்சேரிக்கு 33.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல்

/

தமிழக வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி... ரூ.522.34 கோடி :புதுச்சேரிக்கு 33.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல்

தமிழக வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி... ரூ.522.34 கோடி :புதுச்சேரிக்கு 33.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல்

தமிழக வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி... ரூ.522.34 கோடி :புதுச்சேரிக்கு 33.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல்


ADDED : ஏப் 06, 2025 02:42 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 522.34 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட பீஹார், ஹிமாச்சல பிரதேசம், தமிழகம், புதுச்சேரியுடன், மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது. முறையான வேண்டுகோள் கிடைக்கும் வரை காத்திருக்காமல், பேரிடர்கள் ஏற்பட்ட உடனேயே, மத்திய குழுக்களை, இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

புயல், மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பீஹாருக்கு, 588.73 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு, 522.34 கோடி; ஹிமாச்சல பிரதேசத்திற்கு, 136.22 கோடி; புதுச்சேரிக்கு, 33.06 கோடி என, 1,280.35 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் தொகையாகும். 2024- - 25ம் நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 28 மாநிலங்களுக்கு, 20,264.40 கோடி ரூபாய்; தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 19 மாநிலங்களுக்கு, 5,160.76 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, 19 மாநிலங்களுக்கு, 4984.25 கோடி ரூபாய், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, 8 மாநிலங்களுக்கு, 719.72 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ள பாதிப்புகளுக்கும், மறு சீரமைப்பு பணிகளுக்கும், 37,907 கோடி ரூபாய் வேண்டும்' என, மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us