ADDED : டிச 11, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை விமான நிலையம் வந்த உதயநிதியிடம் 'மின்வாரியஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசு தயாரா' என முதல்வருக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி, ''அதானி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக மீண்டும் குற்றச்சாட்டு வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார் மின்துறை அமைச்சரும் தெளிவாக கூறி இருக்கிறார். இது தொடர்பான விவாதத்திற்கும் தயார் என சொல்லி இருக்கிறோம்,'' என்றார்.
சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருக்கும் என்ற கேள்விக்கு,'தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால், இது குறித்து இப்போது பேச அவசியம் இல்லை'' என்றார்.

