sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

/

நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

10


UPDATED : டிச 01, 2024 09:50 AM

ADDED : டிச 01, 2024 08:26 AM

Google News

UPDATED : டிச 01, 2024 09:50 AM ADDED : டிச 01, 2024 08:26 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது' என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை கடக்க துவங்கி, நேற்றிரவு 10.30 மணிக்கு 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கரையை கடந்துள்ளது. கரையை கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்துள்ளது.



கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதுவரை பதிவான தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதம் 31ம் தேதி, 2004ம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வானிலை எச்சரிக்கைகள், தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us