வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : செப் 12, 2025 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப் 12) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, இன்று (செப் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கடலூர்
* மயிலாடுதுறை
செப்டம்பர் 16, 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.