உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 27, 2025 11:15 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்களை பிப்ரவரி, 20ம் தேதியும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை, பிப்., 22ம் தேதியும், இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் நேற்று முன்தினம் விமானத்தில் சென்னை திரும்பினர். தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
