sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாய்மாமனை கடத்தி கொன்ற தங்கை மகன், 5 பேர் கைது

/

தாய்மாமனை கடத்தி கொன்ற தங்கை மகன், 5 பேர் கைது

தாய்மாமனை கடத்தி கொன்ற தங்கை மகன், 5 பேர் கைது

தாய்மாமனை கடத்தி கொன்ற தங்கை மகன், 5 பேர் கைது


ADDED : ஜன 01, 2024 11:43 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம், காளிவலசை சேர்ந்தவர் சோமசுந்தரம், 80, விவசாயி. இப்பகுதியில், அவருக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. மனைவி, இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்க்க, பழனிசாமி என்பவர் சோமசுந்தரத்தை அழைத்து சென்றார். அதன்பின், மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், காங்கேயம் போலீசில் புகார் கொடுத்தனர். தனிப்படை போலீசார் விசாரித்தனர். சோமசுந்தரத்தின் தங்கை மகன் கொற்றவேல், 50, குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

சொத்து பிரச்னை தொடர்பான முன்வி ரோதத்தில், சோமசுந்தரத்தை கூலிப்படை வாயி லாக கொலை செய்தது தெரிந்தது.

இதுதொடர்பாக, கொற்றவேல், 57, அவரது மனைவி விசாலாட்சி, 44, கூலிப்படையை சேர்ந்த ஈரோடு, வடபழனி சிதம்பரம், 38, உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:


கொற்றவேல் அபகரித்த 9 ஏக்கர் நிலத்தை, கோர்ட் வாயிலாக சோமசுந்தரம் பெற்றார். இதனால், கொற்றவேல் குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர். சோமசுந்தரத்தை கொல்ல திட்டமிட்டனர். இதற்காக, தோட்டத்தில் வேலை செய்து வந்த பழனிசாமி, 58, என்பவருடன் ஆலோசித்தனர்.

இருவரும், ஈரோடு மாவட்டம், வடபழனியில் கூலிப்படையை சேர்ந்த சிதம்பரம், 38, உள்ளிட்ட சிலரை, 5 லட்சம் ரூபாய் கொடுத்து பேசி தயார் செய்தனர். கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்த்து வரலாம் என்று கூறி நம்ப வைத்த பழனிசாமி, சோமசுந்தரத்தை அழைத்து சென்றார். ஈரோட்டிலுள்ள ஒரு வீட்டில் வைத்து சோமசுந்தரத்தை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

சடலத்தை திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான வெங்கரையாம்பாளையம் நொய்யல் ஆற்றில் வீசி சென்றனர். இரு நாட்களாக சடலத்தை நொய்யல் ஆற்றில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது. தலைமறைவாக உள்ள பழனிசாமியை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us