ADDED : ஏப் 16, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி 35, அவரது உறவினர் பாண்டி 36. இருவரும் டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர்.
கமுதி- -புதுக்கோட்டை சாலை தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் டூவீலர் மோதியது.
இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

