sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் அமைச்சர் மீது காசுகளை வீசியதால் பரபரப்பு

/

முன்னாள் அமைச்சர் மீது காசுகளை வீசியதால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் மீது காசுகளை வீசியதால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் மீது காசுகளை வீசியதால் பரபரப்பு


ADDED : ஏப் 01, 2024 04:20 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், கடந்த, 29ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, வேனில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அக்கட்சியை சேர்ந்த, 40 வயது தொண்டர் ஒருவரும், பிரசார வேனின் பக்கவாட்டில் தொங்கியபடி, கோஷமிட்டபடி சென்றார். அப்போது, அந்த நபர் தன் சட்டை பையில் வைத்திருந்த சில்லரை காசுகளை அள்ளி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வீசி, 'அண்ணன் தங்கமணி வாழ்க...' என, முழக்கமிட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத தங்கமணி சுதாரித்து, அந்த தொண்டரை பார்த்து, 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது' என, அறிவுரை கூறினார். கட்சியினர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். இதனால் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us