ADDED : பிப் 15, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக இருந்தது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று வறண்ட வானிலை காணப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து பதிவானது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை தொடர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும்.
சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

