sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் அள்ள அனுமதிக்க ரூ.5000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது

/

மணல் அள்ள அனுமதிக்க ரூ.5000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது

மணல் அள்ள அனுமதிக்க ரூ.5000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது

மணல் அள்ள அனுமதிக்க ரூ.5000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது


ADDED : மே 31, 2024 11:14 PM

Google News

ADDED : மே 31, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வீடு கட்ட சவுடு மணல் அள்ள அனுமதி கேட்ட விவசாயிடம் ரூ.5000 லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கமுதி அருகே கீழ வில்லானேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமாரவேல் 50. இவர் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மணல் அள்ள கமுதி தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெறச் சென்றார். அங்கு தங்களது புதுக்குளம் பகுதி வி.ஏ.ஓ., சித்ரா 30,என்பவரிடம்தாசில்தாரிடம் மணல் அள்ள அனுமதிக்கு பரிந்துரை செய்ய கேட்டார்.

சித்தரா, மற்றும் கிராம உதவியார் வேல்முருகன் 29,ஆகியோர் லஞ்சமாக 10 ஆயிரம் கேட்டனர். முதலில் ரூ.5000 அட்வான்ஸ் கொடுத்தால் பணிகளை துவக்கி விடுவோம். உத்தரவு பெற்று தந்த பின் பாக்கி பணம் தந்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரனிடம் குமாரவேல் புகார் அளித்தார். இதையடுத்து ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

இந்த பணத்தை கமுதி தாலுகா அலுவலகத்தில் மாற்றுப்பணியில் அலுவலக உதவியாளராக இருந்த கிராம உதவியாளர் வேல்முருகனிடம் குமாரவேல் கொடுத்துள்ளார்.அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் வி.ஏ.ஓ., சித்ராவையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us