sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஏப் 15, 2024 12:48 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 15, 1990

கரூரில், 1938, ஜூன் 12ல் பிறந்தவர், 'கல்லாப்பெட்டி' சிங்காரம். நாடக நடிகரும், தயாரிப்பாளருமான இவர், சக நடிகர்களுடன், சென்னை, தேனாம்பேட்டையில் அறை ஒன்றில் தங்கி இருந்தார். வித்தியாசமான உடல் மொழியும், குரல் வளமும் உடைய இவரை, அதே இடத்தில் தங்கி, உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி வந்த பாக்யராஜ் கவனித்தார்.

சிங்காரம், ஏற்கனவே, மோட்டார் சுந்தரம் பிள்ளை, காவல்காரன், சொர்க்கம், மறுபிறவி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். எனவே அவரை, சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் தன் அப்பா வேடத்தில் நடிக்க வைத்தார், பாக்யராஜ். திருட்டு முழியும், கரகர குரலும், அஷ்டகோணல் அப்பாவி முகமுமாய் அவர் பேசிய, 'அடேய்... அழகப்பா இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா' என்ற வசனம் பிரபலமானது.

தொடர்ந்து, இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். ரஜினி, கமல், ராமராஜன் உள்ளிட்டோருடன், 100க்கும் மேற்பட்ட படங்களில் கலகலப்பாக நடித்த இவர், தன், 52வது வயதில், 1990ல், இதே நாளில், கிழக்கு வாசல் படப்பிடிப்பின் போது மறைந்தார்.

உடல் மொழியாலும், குரல் மொழியாலும் சிரிக்க வைத்த, கல்லாப்பெட்டி சிங்காரத்தின் நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us