sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

/

என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

13


ADDED : ஏப் 02, 2024 01:43 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 01:43 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, டில்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், திரைப்பட இயக்குனர் அமீர் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

டில்லியில் மார்ச் 9ல், தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று டில்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' அனுப்பினர்.

'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும், அதிகாரிகளிடம், 100 சதவீதம் எடுத்து வைத்து வெற்றியுடன் திரும்பி வருவேன்' என, அமீர் கூறி வருகிறார்.

இவர், டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். ஏற்கனவே, அமீருடன் இருந்த தொடர்பு குறித்தும், போதை பொருள் கடத்தல் தொழில் குறித்து அமீருக்கு தெரியும் என்றும், ஜாபர் சாதிக் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அமீருடன் பல மணி நேரம் விசாரணை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us