sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி

/

அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி

அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி

அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி

3


UPDATED : மே 21, 2024 05:08 PM

ADDED : மே 21, 2024 12:22 PM

Google News

UPDATED : மே 21, 2024 05:08 PM ADDED : மே 21, 2024 12:22 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல்துறை மற்றும் தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.

கேரளா இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, வட்டவடா பஞ்சாயத்து, பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, மலைச்சரிவில் அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில், கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. சிலந்தி நீர் வீழ்ச்சிக்கு அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால், கம்பக்கல் மலைச்சரிவிலிருந்து, மஞ்சம்பட்டி வழியாக, தேனாறுக்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதிகள் பாதிக்கும்.

எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, அமராவதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.அமராவதி பாசன கோட்ட அதிகாரிகள் குழு, கேரள அரசு அணை கட்டும் பகுதியை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

அனுமதி இருக்கா?


இந்நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துள்ளது. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது குறித்து சுற்றுச் சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரள அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


அமோனியா கசியவிட்ட ஆலை


சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகு ஆலையைத் திறக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று (மே.21) தீர்ப்பளித்தது. தொழிற்சாலையை மீண்டும் திறக்க கட்டுப்பாடு விதித்து, பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.








      Dinamalar
      Follow us