sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி


ADDED : ஏப் 10, 2024 11:37 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகம் முழுதும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டை பொருத்தும் பணி, துவங்கியது.

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தொகுதிகளில், 76 பெண்கள் உட்பட, 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில், 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பட்டன்கள் இருக்கும். எனவே, 15 வேட்பாளர்களின் பெயர் இடம் பெறும். வேட்பாளர்கள் பெயருக்கு பின், கடைசியாக, 'நோட்டா' பட்டன் இடம் பெறும். வேட்பாளர்கள் 15 பேருக்கு மேல் போட்டியிட்டால், கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டை பொருத்தும் பணி, நேற்று தமிழகம் முழுதும் துவங்கியது. இந்த பணி, அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us