sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அகழாய்வு விபரம் இணையதளத்தில் கிடைக்காமல் ஆய்வாளர்கள் அவதி

/

அகழாய்வு விபரம் இணையதளத்தில் கிடைக்காமல் ஆய்வாளர்கள் அவதி

அகழாய்வு விபரம் இணையதளத்தில் கிடைக்காமல் ஆய்வாளர்கள் அவதி

அகழாய்வு விபரம் இணையதளத்தில் கிடைக்காமல் ஆய்வாளர்கள் அவதி


ADDED : செப் 17, 2024 05:48 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அகழாய்வு புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் பெற முடியாததால், தொல்லியல் சார்ந்த ஆய்வாளர்கள் அவதிப்படுகின்றனர்.

நாட்டில் மத்திய, மாநில தொல்லியல் துறைகள், பல்கலைகளால் அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் கிடைக்கும் தொன்மையான பொருட்களை வைத்து, புதிய வரலாறுகள் கட்டமைக்கப்படுகின்றன.

ஆனால், இந்த தொல்பொருட்கள் குறித்த தகவல்களையும், படங்களையும், அகழாய்வை நடத்திய நிறுவனங்களே வைத்துக் கொள்கின்றன. இவற்றில் பல நுாலாக்கம் செய்யப்பட்டு, பொதுவெளிக்கு வருவதில்லை.

இந்நிலையில், புதிய வரலாற்று ஆதாரங்களை தேடி, கட்டுரைகளை எழுதி, ஆய்வரங்கங்களில் சமர்ப்பிக்க விரும்புவோருக்கு, அவை கிடைப்பதில்லை.

இணையதளத்திலும், நுாலகங்களிலும் கிடைக்கும் பழைய நுால் ஆதாரங்களையே இதற்கு பயன்படுத்துகின்றனர். இதனால், ஆய்வு மாணவர்களுக்கு புதிய தகவல்கள் போய் சேர்வது இல்லை.

இது குறித்து, ஆய்வாளர்கள் கூறியதாவது:

வெளிநாட்டில் நடக்கும் அகழாய்வுகளை, அந்தந்த நிறுவனங்கள் தங்களின் இணையதளங்களில் பதிவேற்றி விடுகின்றன. அது, உலக ஆய்வாளர்களுக்கு பொதுச் சொத்தாகிறது. அத்துடன், கட்டுரைகள், புனைவுகள் எழுதுவோருக்கும் பயன்படுகிறது.

ஆனால், நம் நாட்டில் சிந்துவெளிக்கு பின் நடந்த அகழாய்வு தகவல்களை, மத்திய, மாநில தொல்லியல் துறையினரும், பல்கலைகளின் தொல்லியல் துறையினரும் வெளியிட தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலை மாறினால் தான், வரலாறு சார்ந்த பழைய நம்பிக்கைகள் மாறும்; ஆசிரியர்களின் நிலைப்பாடும் மாறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us