டிரைவர் மீது போதை வழக்கு; மேயருக்கு வந்தது சிக்கல்
டிரைவர் மீது போதை வழக்கு; மேயருக்கு வந்தது சிக்கல்
ADDED : ஏப் 29, 2024 11:32 PM
நாகர்கோவில் : மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் என்பவர் திருவனந்தபுரம் மேயராக உள்ளார். இவரும், இவரது கணவர் எம்.எல்.ஏ., சச்சின் தேவ் என்பவரும் ஏப்., 27 இரவு 10:00 மணிக்கு சொந்த காரில் பயணம் செய்தனர்.
அப்போது, காருக்கு முன்னால் சென்ற அரசு பஸ் வழி விடவில்லை. இதை தொடர்ந்து திருவனந்தபுரம் பாளையம் அருகே பஸ்சை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தினர்.
பஸ் டிரைவர் யதுவிடம், மேயர் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யது மீது போதை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
போதை பொருள் பயன்படுத்திவிட்டு, அதன் கவரை தங்கள் வாகனத்தின் மீது வீசியதாக மேயர் கூறியிருந்தார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் போதை பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதால் மேயர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

