sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்'

/

'தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்'

'தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்'

'தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்'

3


ADDED : மார் 30, 2024 01:13 AM

Google News

ADDED : மார் 30, 2024 01:13 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட குரூப்-1 தேர்வில்,மாநில அளவில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே மாச்சாபாளையத்தை சேர்ந்த மாருதிபிரியா முதலிடம் பெற்றுள்ளார்.

குமாரபாளையம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்தார். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணி செய்கிறார். தற்போது குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அரசு பணிக்கான போட்டி தேர்வுகளை, நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். பல பயிற்சி மையங்களில் போட்டி தேர்வுக்காக பயிற்சி பெற்றேன். குரூப்-4ல் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தபோதிலும், குரூப்-1 தேர்வுக்காக தொடர்ந்து முயன்றேன். கடந்த, 2019 முதல் தேர்வு எழுதி, 3ம் முறையாக தேர்வில் வெற்றியை கண்டுள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக கருதுகிறேன். போட்டி தேர்வுகள் எழுதுபவர்கள், தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. தொடர்ந்து முயல வேண்டும்; எழுத வேண்டும்.

'நான் வெற்றிக்கான அடையாளம் அல்ல; தோல்விக்கான அடையாளமாகவே கருதுகிறேன்'. என்னை பார்த்து போட்டி தேர்வை சந்திப்பவர்கள், தொடர்ந்து முயன்று வெற்றி பெற வேண்டும்.

என் தந்தை ராமசாமி, பொதுப்பணித்துறை, மேட்டூர் அணை பிரிவில் ஏ.இ.,யாக இருந்து காலமாகி விட்டார். தாயார் காந்திமதி, குடும்ப தலைவி. எனது கணவர் பிரபாகரன், ஈரோட்டில் கெமிக்கல் கம்பெனி மார்க்கெட்டிங் ஊழியராக பணி செய்கிறார். எனக்கு இரட்டை குழந்தைகளாக ஸ்ருதி, ஸ்மிதி உள்ளனர். இவர்கள், 5ம் வகுப்பு படிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us