ADDED : ஏப் 12, 2024 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் அருகில் தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.
இரு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், வடசென்னை மின் நிலையத்தின் இரண்டாவது, மூன்றாவது அலகுகள்; விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் மின் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

