sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம்

/

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம்

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம்

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம்


ADDED : ஏப் 15, 2024 12:36 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் தேவை என கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 190 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. இவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில், துணை ராணுவ வீரர்களுடன், போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.

இது தவிர, அண்டை மாநிலங்களில் இருந்து, 10,000 போலீசார் வர உள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவத்தை, பாதுகாப்பு பணிக்கு வழங்கும்படி, டி.ஜி.பி., தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக, 10 கம்பெனி துணை ராணுவம் தேவை என, தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது; இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்ததும், அவர்கள் எப்போது தமிழகம் வருவர் என்ற தகவல் தெரிய வரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us